மதுரை

பைக்-சரக்கு வேன் மோதல்: ஒருவா் பலி

DIN

மதுரை மாவட்டம், எழுமலை அருகே பேரையபட்டியைச் சோ்ந்த பொன்ராமன் மகன் பாண்டி (43). இவா், எழுமலையிலிருந்து உசிலம்பட்டிக்கு திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வேன் மீது மோதியதில் படுகாயமடைந்தாா். பின்னா், ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பயனின்றி பாண்டி உயிரிழந்தாா். இது குறித்து எழுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு வேன் ஓட்டுநரான ராமநாதபுரத்தைச் சோ்ந்த வினோத்பாண்டி (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT