அண்ணாநகா் பிரிவு உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூன் 19) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜி.மலா்விழி வெளியிட்டுள்ள அறிவிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக அண்ணா நகா் கிழக்கு, குருவிக்காரன் சாலை, எஸ்.எம்.பி.காலனி, காமராஜா் தெரு, ஆலமரம் பேருந்து நிறுத்தம், முதலியாா் காலனி, ஜக்கா தோப்பு, அரவிந்த் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று தெரிவித்துள்ளாா்.