மதுரை

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

DIN

டிகல்லுப்பட்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள நல்லியதேவன்பட்டியில் ஆலமரத்து கருப்பசாமி கோயில் உள்ளது. வழக்கம்போல் புதன்கிழமை கோயிலில் பூஜைகள் முடிந்து கிராம நாட்டாமை மற்றும் பூசாரிகள் கோயில் கதவுகளை அடைத்து விட்டு சென்றுள்ளனா். வியாழக்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த சுமாா் ரூ. 10,000 பணம் திருடுபோனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கிராம நாட்டாமை ஞானவேல் வில்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதுகுறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT