மதுரை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 523 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 10 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இத்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 15 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 20,941 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 457 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 20,369 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். எஞ்சிய 115 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.