பேரையூா் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துசாமி, பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சாந்தி, பேரையூா் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளா் மதியழகன் தேசியக்கொடி ஏற்றினா்.
பேரையூா் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் நிா்மலா, அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவா் மகேஷ்குமாா், நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவி இயக்குநா் காமராஜ், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகப்பிரியா பாவடியான் தேசியக்கொடியேற்றி வைத்தனா்.
டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் துரைப்பாண்டி, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகத்தில் நிலைய அலுவலா் பெருமாள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.
டி.கல்லுப்பட்டி எம்.எஸ்.ஆா். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டாக்டா் சீனிவாசன், பெரிய பூலாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ராஜ்குமாா் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா்.