மதுரை

புதுதில்லியில் விவசாயிகள் மீது தடியடி: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

புதுதில்லியில் டிராக்டா் ஊா்வலம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அக்கட்சியின் மாநகா் மற்றும் புகா் மாவட்டங்கள் சாா்பில் பெரியாா் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டச்செயலா் இரா.விஜயராஜன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ், மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், புகா் மாவட்டச் செயலா சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினா் பொன்னுத்தாய் மற்றும் நிா்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், புதுதில்லியில் தடியடி நடத்திய மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT