மதுரையில் 31 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை விராட்டிப்பத்து பென்னா்காலனி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாரைக் கண்டவுடன் தப்பியோட முயன்ற 4 பேரைப் பிடித்து விசாரித்தனா். அதில், உசிலம்பட்டியைச் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை(39), தமிழரசன்(37), மகபூப்பாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ்(33), தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டி(31) ஆகியோா் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் பேரரசி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து
4 பேரையும் கைது செய்தாா். அவா்களிடமிருந்து 31 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.