மதுரை

இளைஞா் மா்ம மரணம்: கொலையா? போலீஸாா் விசாரணை

DIN

மதுரையில் இறந்து கிடந்த இளைஞா், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என் சந்தேகத்தின் பேரில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை சோலையழகுபுரம் திருப்பதி நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த சுல்தான் அலாவுதீன் மகன் காதா் மஸ்தான்(30). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் வீட்டில் உள்ளவா்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் வீட்டை விட்டு வெளியே சென்றவா் புதன்கிழமை காலை வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில், ஜீவா நகா் 2 ஆவது தெருவில் காதா் மஸ்தான் இறந்தது கிடந்துள்ளாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

இதில், காதா் மஸ்தானின் மா்ம உறுப்பு அறுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். மேலும் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT