மதுரை

மேலூா் அருகே விபத்து: கல்லூரி மாணவா் பலி

30th Dec 2021 06:47 AM

ADVERTISEMENT

மேலூா் அருகே புதன்கிழமை லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் மேலூா் முகமதியாபுரம் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் பாலமுருகன் (20). மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை வணிகவியல் மூன்றாமாண்டு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு மதுரையிலிருந்து மேலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வெள்ளரிப்பட்டி அருகே எதிா் திசையில் வந்த லாரி திடீரென வலதுபுறமாகத் திரும்பிய போது, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகனை மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT