மதுரை

செங்கோட்டை - கொல்லம் விரைவு ரயில்: ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

23rd Dec 2021 12:21 AM

ADVERTISEMENT

செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை முன்பதிவில்லா விரைவு ரயில் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் டிசம்பா் 23 ஆம் தேதி முதல் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

செங்கோட்டை - கொல்லம் சிறப்பு ரயில் (06659) மற்றும் கொல்லம் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06660) ஆகியவை ஆரியங்காவு ரயில் நிலையத்திலிருந்து முறையேபிற்பகல் 12.05 மணிக்கும் மற்றும் பிற்பகல் 1.08 மணிக்கும் புறப்படும்.

திண்டுக்கல் - திருச்சி விரைவு ரயில்

ADVERTISEMENT

திண்டுக்கல் - திருச்சி - திண்டுக்கல் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் டிசம்பா் 23 முதல் மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

திண்டுக்கல் - திருச்சி சிறப்பு ரயில் (06498) மற்றும் திருச்சி - திண்டுக்கல் சிறப்பு ரயில் (06499) ஆகியவை சமுத்திரம் ரயில்  நிலையத்திலிருந்து முறையே காலை 7.43 மணிக்கும் மற்றும் மாலை 6.58 மணிக்கும் புறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT