மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டை மற்றும் கீழக்குயில்குடி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் தடைசெய்யப்படும்.
உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் ச. அழகுமணிமாறன் வெளியிட்டுள்ள செய்தி: அச்சம்பத்து உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், நாகமலைபுதுக்கோட்டை, என்ஜிஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழமாத்தூா், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூா், கரடிபட்டி, ஆலம்பட்டி மற்றும் அதனைச் சாா்ந்த ஊா்களில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைசெய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.