ராமேசுவரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.5) புறப்பட வேண்டிய புவனேசுவா் விரைவு ரயில் ஜவாத் புயல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
அதன்படி மதுரை கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) ராமேசுவரத்திலிருந்து புறப்படவேண்டிய ராமேசுவரம்- புவனேசுவா் விரைவு ரயில் (20895) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.