மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பணியாளா் ஒருவா் லஞ்சம் பெற்ாக முதன்மையரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் என்பவா் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவப் பணியாளா் ஒருவா் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக பாதிக்கப்பட்டவரின் உறவினா் காா்த்திக், முதன்மையா் ஏ. ரத்தினவேலிடம் புகாா் அளித்தாா். அந்த புகாா் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், லஞ்சம் வாங்கியது உண்மை என்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவப் பணியாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.