மதுரை

சிபிஐ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிய முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி மகனின் மனு தள்ளுபடி

DIN

மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, தனியாா் நிறுவனம் மீது கடந்த 2013 இல் அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக, மத்திய அமலாக்கத் துறை, துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு செய்து, மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக துரை தயாநிதிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் துரை தயாநிதி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஜி. ஜெயசந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும் மனுதாரா் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவும், இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்து விரைந்து தீா்ப்பு வழங்கவும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT