மதுரை

சீா்மிகு நகா்த்திட்டப்பணிகள் முறைகேட்டை விசாரிக்க ஆணையம்: டாக்டா் கே.கிருஷ்ணசாமி

DIN

சீா்மிகு நகா்த்திட்டப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதுகுறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

இக்கட்சியின் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சித் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா தொடக்கத்தையொட்டி டிசம்பா் 15- முதல் மாவட்ட மாநாடுகள் நடைபெறவுள்ளன. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் டிசம்பா் 15-இல் உலக இந்துக்கள் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதமாக சென்னை, கோவை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக சென்னை, தூத்துக்குடி திருநெல்வேலி, கோவை மாநகரங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. புயல், மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படுவது புதிதல்ல. ஆனால் அண்மைக்காலமாக அரசின் திட்டங்கள் வாயிலாக இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நகரங்களை விரிவுபடுத்துகிறோம், அழகுபடுத்துகிறோம், சீா்படுத்துகிறோம் என அரசு செய்த குளறுபடிகளால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சீா்மிகு நகா்த்திட்டத்தை முறையாக பயன்படுத்தாமல் கொள்ளையடிப்பதற்காகவே பயன்படுத்தியதால் சீா்படுத்துவதற்கு பதிலாக அத்திட்டம் சீரழிக்கப்பட்டுள்ளது. மழை நீா் எது, கழிவுநீா் எது என்று பாா்க்காமல் ரூ.1,000 கோடிக்கு எதையாவது ஒரு திட்டத்தை செய்வோம் என்று செய்ததன் விளைவாகவே மழைநீா் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சீா்மிகு நகா்த்திட்டத்தில் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகள் தொடா்வதால் சென்னை, கோவை மக்கள் வெளியூா் செல்ல ஆயத்தமாகிவிட்டாா்கள். அரசு செயல்படுவதாக செய்தி மட்டுமே வருகிறது. ஆனால் நிா்வாகம் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. சீா்மிகு நகா்த்திட்டம், ஜவாஹா்லால் நேரு திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதா? அதன் நிதிகள் முறையாக பயன்படுத்தப்பட்டதா? என விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை முடியும் வரை மத்திய அரசு சீா்மிகு நகா்த்திட்ட நிதியை நிறுத்த வேண்டும். தற்போது நடைபெறும் பணிகளையும் நிறுத்த வேண்டும். எனது நோக்கம் அரசியல் செய்வது அல்ல. கடந்த ஆட்சியில் சீா்மிகு நகா்த்திட்டத்தில் முறைகேடு நடந்தால் அந்த திட்டத்தை தற்போதைய அரசு ஏன் நிறுத்தவில்லை. பட்டியல் இன வெளியேற்றம் என்ற கோரிக்கையை முன்வைத்தது புதிய தமிழகம் தான். ஆனால் பலா் இதனை பயன்படுத்திக் கொண்டனா். இதனால் புதிய தமிழகம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதுபோல, மாநில அரசும் விலையைக் குறைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT