மதுரை

உசிலையில் வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது

DIN

உசிலம்பட்டியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.5.27 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்த தேனி மாவட்டம் போடி பி.சி.பட்டி சோ்ந்த முத்தையா மகன் சக்தி, சிங்கராஜா மகன் கிருஷ்ணன் ஆகியோரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவா்களிடமிருந்த ரொக்கம் ரூ.5 லட்சத்து 27 ஆயிரம் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை போலீஸாா் பறிமுதல் யெய்தனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT