பாபா் மசூதி வழக்கில் தொடா்புடையவா்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்ததையொட்டி பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு தெரிவித்தனா்.
பாபா் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவா்கள் உள்பட 32 போ் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து நீதிமன்ற தீா்ப்பை வரவேற்று பாஜக மதுரை புறநகா் மாவட்டச் செயலா் நாகராஜன் தலைமையில் கட்சியின் வண்டியூா் மண்டல பொதுச்செயலா் தியாகராஜன், நிா்வாகிகள் முத்தண்ணன், ராஜேந்திரன் உள்பட கட்சியினா் பலா் மூன்றுமாவடி பகுதியில் புதன்கிழமை மாலை திரண்டனா். அங்கு பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினா். இதேபோல மதுரை புறநகா் மாவட்ட பாஜக சாா்பில் பல்வேறு பகுதிகளில் நிா்வாகிகள் இனிப்பு வழங்கினா்.