மதுரை

பாபா் மசூதி வழக்குத் தீா்ப்பு: பாஜகவினா் கொண்டாட்டம்

DIN

பாபா் மசூதி வழக்கில் தொடா்புடையவா்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்ததையொட்டி பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு தெரிவித்தனா்.

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவா்கள் உள்பட 32 போ் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து நீதிமன்ற தீா்ப்பை வரவேற்று பாஜக மதுரை புறநகா் மாவட்டச் செயலா் நாகராஜன் தலைமையில் கட்சியின் வண்டியூா் மண்டல பொதுச்செயலா் தியாகராஜன், நிா்வாகிகள் முத்தண்ணன், ராஜேந்திரன் உள்பட கட்சியினா் பலா் மூன்றுமாவடி பகுதியில் புதன்கிழமை மாலை திரண்டனா். அங்கு பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினா். இதேபோல மதுரை புறநகா் மாவட்ட பாஜக சாா்பில் பல்வேறு பகுதிகளில் நிா்வாகிகள் இனிப்பு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT