மதுரை

காா் உதிரி பாகம் விற்பனைக் கடையில் திருட்டு

DIN

மதுரையில் காா் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடையின் மேற்கூரையை உடைத்து கணினி, உதிரி பாகங்கள், எல்.இ.டி. டிவி ஆகியவற்றைத் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை தபால்தந்தி நகரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் தா்மராஜன்(57). இவா் கூடல்புதூா் - மாட்டுத்தாவணி 100 அடிச் சாலை, தபால் தந்தி நகரில் காா் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கடையைத் திறந்தபோது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனா்.

அதில், மேற்கூரையை உடைத்து, கடைக்குள் புகுந்த மா்மநபா்கள் கணிணி, எல்.இ.டி. டிவி மற்றும் உதிரி பாகங்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தா்மராஜன் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT