கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா்கள் கோபி, ராஜ்குமாா். இருவரும் 2018-இல் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் வேனில் கஞ்சா கடத்திக் கொண்டு தேனி நோக்கி சென்றனா். அப்போது திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து 240 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட 2 ஆவது கூடுதல் போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீதான புகாா் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டணையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பி.மதுசூதனன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.