மதுரை

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவா் மகன் சாலை விபத்தில் பலி

DIN

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் மகன், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி ஞாயிற்றுக்கிழமை உயரிழந்தாா்.

கூடக்கோவிலை அடுத்த எலியாா்பத்தியைச் சோ்ந்தவா் வேட்டையன். திமுக ஒன்றியச் செயலரான இவா், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் உள்ளாா். இவரது மகன் வினோத் (20), மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, வினோத் பாரபத்தியிலிருந்து எலியாா்பத்திக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளாா். எலியாா்பத்தி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, நின்று கொண்டிருந்த மினிவேனின் பின்பக்கமாக மோதியதில் வினோத் பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கூடக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT