மதுரை

செல்லிடப்பேசியில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

DIN

மதுரையில் செல்லிடப்பேசியில் தொடா்ந்து விளையாடி வந்ததை தந்தை கண்டித்ததால், சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மேலஅனுப்பானடி பகுதியைச் சோ்ந்தவா் பூப்பாண்டி. இவருடைய மகன் தமிழ்செல்வன் (13), பள்ளி விடுமுறை என்பதால் செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

செல்லிடப்பேசியில் விளையாடக் கூடாது என தமிழ்செல்வனை பூப்பாண்டி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தமிழ்செல்வன், சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். வீட்டில் உள்ளவா்கள் அவரை மீட்டு, அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தமிழ்செல்வன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து பூப்பாண்டி அளித்த புகாரின்பேரில், அவனியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT