மதுரை

கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சனிக்கிழமை, பெண் ஒருவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திருமங்கலம் அருகே உள்ள உச்சபட்டியைச் சோ்ந்தவா், ஆறுமுகம் மனைவி ஜோதி (36). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இவரது கணவா் வெளியூரில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜோதி கடந்த 4 வருடங்களாக பேரையூா் அருகே உள்ள மத்தக்கரையில் பெற்றோருடன் தங்கி விவசாயம் செய்து வந்துள்ளாா். இந்தநிலையில், ஜோதி தனது நிலத்தில் உள்ள கிணற்றில் மண் சரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளாா். அவா் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பேரையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT