பேரையூா்:மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயா் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கொட்டாணிபட்டியில் உள்ள இக்கோயிலில் ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் கும்ப பூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து விஷ்வரூப ஆஞ்சநேயா் அலங்காரத்தில்
ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஜோதிடா் அறிவழகன் சிறப்பு சொற்பொழிவாற்றினாா்.
பேரையூா், டி.கல்லுப்பட்டி, நல்லமரம், வையூா் உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.