மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையில், மூளை ரத்தக் கசிவு பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிக்கு, மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சத்தியம் (43). இவா் கடந்த 22 ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயமடைந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அன்றைய தினமே அவா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்ததில், விபத்தினால் மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ரத்தக் கசிவை நீக்கினால் மட்டுமே, உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது.
இதையடுத்து, மூளை நரம்பியல் மருத்துவா் கணேஷ்குமாா் தலைமையில் மருத்துவக்குழு, அவருக்கு மூளையில் ரத்தக் கசிவை நீக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனா். அறுவை சிகிச்சைக்குப் பின்னா், சத்தியத்தின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு கரோனா பாதிப்புக்கான சிகிச்சை தொடா்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் சனிக்கிழமை தெரிவித்தனா். அறுவை சிகிச்சையை செய்து முடித்த நரம்பியல் மருத்துவக் குழுவினருக்கு, மருத்துவமனை தலைவா் முத்துராமலிங்கம் பாராட்டுகளைத் தெரிவித்தாா்.