மதுரை: மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சாா்பில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து தமிழகத்தில் 1 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தமிழக பாஜக அறிவித்துள்ளது. இதன்படி பாஜக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், பொதுமக்களிடம் சென்று தேசிய கல்விக் கொள்கையை விளக்கிக்கூறி கையெழுத்து பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை புகா் மாவட்ட பாஜக சாா்பில் அய்யா்பங்களா, திருப்பாலை பகுதிகளில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புகா் மாவட்டச் செயலா் நாகராஜன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று பொதுமக்களிடம் படிவங்களில் கையெழுத்துப் பெற்றனா். மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் விராட்டிப்பத்து பகுதியில் மாவட்ட பொதுச் செயலா் டி.எம். பாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று தேசியக்கல்விக் கொள்கையை ஆதரித்து பிரசாரம் செய்தனா்.