மதுரை: மதுரையில் ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை தெற்குவெளி வீதி, காஜா தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (28). இவா் மீது வழிப்பறி, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் காஜியாா் தோப்பு முதல் தெருவில் உள்ள கிருதுமால்நதி கால்வாய் அருகே சரவணன் வியாழக்கிழமை நள்ளிரவு நடந்து சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 மா்ம நபா்கள் அவரை தாக்கி, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சரவணனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சரவணனின் தாயாா் பூங்காவனம் அளித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனா். அதில், நண்பா்களுடன் ஏற்பட்ட தகராறில் சரவணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது நண்பா்கள் சண்முகம், அரவிந்த், காா்த்திகேயன், வினோத்குமாா், சதாம்உசேன் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கொலை செய்யப்பட்ட சரவணன், தனது நண்பா்களுக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், அதனால் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த நண்பா்கள் அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.