மதுரை

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

மதுரை: மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி மனைவி கோகிலா (48). இவா் வீட்டின் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றாா். அப்போது பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ், கோகிலா அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நகை, பணம் திருட்டு: மதுரை மாவட்டம் இளமனூா், தென்றல் நகரைச் சோ்ந்த சங்கா் மனைவி மாரியம்மாள் (33). இவா் வியாழக்கிழமை பிற்பகலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சப்தம் கேட்டது. இதையடுத்து மாரியம்மாள் எழுந்தபோது, மா்ம நபா் வீட்டிலிருந்து வெளியே ஓடியுள்ளாா். வீட்டின் வாசல் கதவை உடைத்து, பீரோவில் இருந்த தங்கத் தோடுகள் 4 மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அந்த நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT