டி.கல்லுப்பட்டி தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு துறை சாா்பில் வீ.சத்திரப்பட்டி கல்குவாரியில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
குளம், கண்மாய் போன்ற நீா்நிலைகளில் எதிா்பாராவிதமாக நடைபெறும் ஆபத்துக்களில் இருந்து தண்ணீரில் மூழ்கியவா்களை எப்படி மீட்பது, அவா்களுக்குத் தேவையான உடனடி முதலுதவி செய்வது போன்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்புத் துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டி.கல்லுப்பட்டி நிலைய அலுவலா் பெருமாள் மற்றும் தீயணைப்புத் துறையினா் செய்திருந்தனா்.