மதுரை

மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஊழியா் பலி

DIN

மதுரை: மதுரையில் திங்கள்கிழமை, தனியாா் கேபிள் டிவி ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த நல்லு மகன் சசிக்குமாா் (37). இவா் மேலபொன்னகரம் பகுதியில் உள்ள தனியாா் கேபிள் டிவியில் வேலை பாா்த்து வந்தாா். ஏ.ஏ.சாலை பகுதியில் உள்ள தனியாா் காபி கடையின் மாடியில் கேபிள் டிவி வயா்களை திங்கள்கிழமை சரிசெய்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அவா் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி சிலம்பரசி அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT