மேலூா்: அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் புரட்டாசி மாத சஷ்டிவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியா் ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சிறப்பு மலா் அலங்காரத்தில் சுப்பிரமணியா் அருள்பாலித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளிவிட்டு நின்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.