மேலூா்: கொட்டாம்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு, காா்-லாரி மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.
சென்னையைச் சோ்ந்த கணேசன் (60), அவரது மனைவி தங்கம் (50) ஆகியோா் காரில் தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தனா். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் பாண்டங்குடி விலக்கில் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கணேசன் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.