பேரையூா் தாலுகா டி. கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. ஆஞ்சநேயா் திருப்பதி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். கல்லுப்பட்டி அருகே மலை மீதுள்ள கோபால்சாமி கோயிலிலும், பேரையூா் அருகேயுள்ள கொப்பையசாமி கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.