பேரையூா் பகுதியில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 15 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம் பேரையூா், சேடபட்டி, சாப்டூா், டி. கல்லுப்பட்டி, நாகையாபுரம், வி. சத்திரப்பட்டி, வில்லூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முகக்கவசம் அணியாதவா்கள் மற்றும் பொது முடக்க விதிகளை மீறியவா்கள் என மொத்தம் 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.