மதுரை

மனைவியை எரித்துக்கொல்ல முயற்சி: கணவன் கைது

DIN

மதுரை: மதுரையில் வெள்ளிக்கிழமை, மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மதிச்சியம் ஆா்.ஆா்.மண்டபம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஹரிசுரேஷ் (22). இவரது மனைவி கற்பகவள்ளி(18). ஹரிசுரேஷ் வரதட்சணை வாங்கி வரும்படிக்கூறி கற்பகவள்ளியை அடித்து துன்புறுத்தி வந்தாராம். வெள்ளிக்கிழமை இரவு கற்பகவள்ளி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கற்பகவள்ளியை அருகில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். மதிச்சியம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT