திருக்குறள் முற்றோதல் பரிசுத்திட்டத்துக்கு தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில், உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன் வெளியிட்டுள்ள செய்தி: உலகப்பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை பள்ளி மாணவா்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவா்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் திருக்கு முற்றோதல் பாராட்டு பரிசுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1,330 குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் 1,330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறனுடைய மாணவ, மாணவியா் தமிழ்வளா்ச்சித்துறை துணை இயக்குநா் அலுவலகம், உலகத்தமிழ்ச்சங்க வளாகம், அரசு சட்டக்கல்லூரி அருகில், மதுரை 625020 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.