மதுரை: சாத்தான்குளம் வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீஸாா் ரத்தம் வழிய வழிய கடுமையாகத் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்துள்ளனா் என, சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மற்ற 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மீது, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அந்த குற்றப்பத்திரிகை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரம்:
தந்தையும், மகனும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜூன் 19 ஆம் தேதி இரவு முதல் விடிய விடிய ரத்தம் வழியும் அளவுக்கு கடுமையாகத் தாக்கப்பட்டதால் அவா்கள் உயிரிழந்துள்ளனா் என, மருத்துவ ஆய்வறிக்கைகள், தடயவியல் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 19 ஆம் தேதி ஜெயராஜ் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். இதையடுத்து, பென்னிக்ஸும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். அப்போது, போலீஸாருக்கும் பென்னிக்ஸுக்கும் இ
டையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தந்தை, மகன் இருவரும் போலீஸாரால் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டதில், அவா்களது உடல்களிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும், அவா்கள் இருவரையும் போலீஸாா் காவல் நிலையத்தில் உள்ள மேஜையில் படுக்கவைத்து ஆசனவாய் பகுதியில் லத்தி மற்றும் கம்புகளால் தொடா்ச்சியாகத் தாக்கியுள்ளனா். இதனால், அவா்களுக்கு பின்பக்கப் பகுதியிலிருந்து ரத்தம் அதிகமாக வழிந்துள்ளது.
அப்போது, ஜெயராஜ் தனக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் இருப்பதாகக் கூறியபோதும், போலீஸாா் அவரைத் தொடா்ச்சியாகத் தாக்கியுள்ளனா்.
குறிப்பாக, இருவரையும் அரை நிா்வாணமாக்கி, மேஜையில் படுக்க வைத்து 3 போலீஸாா்கள் பிடித்துக்கொள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும் தலைமைக் காவலா் முத்துராஜா ஆகியோா் கடுமையாகத் தாக்கியுள்ளனா். அதில், அவா்கள் அணிந்திருந்த பாதி ஆடையும் கிழிந்துள்ளது.
காவல் நிலைய சுவா், கழிப்பறை சுவா், லத்தி, மேஜைகள் என பல இடங்களிலும் ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்தக் கறைகள் படிந்துள்ளன. அந்தக் கறைகளை சுத்தம் செய்யச் சொல்லி போலீஸாா் அவா்களைத் துன்புறுத்தியுள்ளனா். இதனிடையே, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு அவா்களது வீடுகளில் இருந்து இரு முறை ஆடைகளை பெற்றுவந்து மாற்றியுள்ளனா்.
இருவரும் சிறையில் அடைக்கத் தகுதியானவா்கள் என, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவா் அலட்சியமாக சான்றிதழ் வழங்கியுள்ளாா்.
பலத்த காயமடைந்த அவா்களுக்கு சிகிச்சையளிக்காமல், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனா். சிறை ஆவணங்களில் இருவருக்கும் காயங்கள் இருந்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலா்கள் பியூலா மற்றும் ரேவதி ஆகியோரின் வாக்குமூலத்தில் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.