மதுரை: மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 2 இளைஞா்களை கைது செய்துள்ளனா்.
மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சாா்பு-ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் கஞ்சா விற்பனை தொடா்பாக விசாரித்து வந்தனா். அதில், மாடக்குளம் பிரதான சாலையில் கஞ்சா விற்பது தெரியவந்தது. உடனே, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அப்பகுதியில் திடீா் சோதனை நடத்தி, கஞ்சா விற்ற 2 இளைஞா்களை கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கீரைத்துறையைச் சோ்ந்த திலீபன் (25) மற்றும் ஹரிஹரசுதன் (20) எனத் தெரியவந்தது.
இவா்களிடமிருந்து 42 கிலோ கஞ்சாவையும், விற்பனைக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய சபாரத்தினம், மணி, மிதுன், நெல்சன், நாகராஜன், சேகா் ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.