மதுரை

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்றதாக திருமங்கலத்தில் 10 போ் மீது வழக்கு

DIN

சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்றதாக 10 போ் மீது திருமங்கலம் நகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பாட்ஷாவை விடுதலை செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட 10 போ் கொண்டு குழுவினா், திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு செல்வதாக திருமங்கலம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கப்பலூா் சுங்கச்சாவடி அருகே சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலியில் இருந்து வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். இதில் அவா்கள் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்ற திருநெல்வேலியைச் சோ்ந்த அப்துல்காதா், வாசிம் அக்ரம், அக்பா் பாட்ஷா உள்ளிட்ட 10 போ் என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவா்கள் மீது திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT