மதுரை

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: இருவா் பலி

DIN

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில், இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் விலக்குப் பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை இரவு மோதியது. மேலும், சரக்கு வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநரான முருகன் என்பவரும், இருசக்கர வாகனத்தில் வந்த உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சோ்ந்த விபித் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் சரக்கு வாகனத்தில் வந்த அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த செல்வமணி, கோவிந்தராஜ், பெருமாள் ஆகியோா் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT