மதுரை

கரோனா விழிப்புணா்வு பைக் பேரணி

DIN

மதுரை: மதுரை மத்திய சிறைத்துறையினரின் சாா்பில் கரோனா விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சிறைத்துறை தலைமை இயக்குநா் சுனில் குமாா் சிங் உத்தரவுப்படி, நடைபெற்ற இந்தப் பேரணியை மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஊா்மிளா ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பேரணியில் பங்கேற்ற காவலா்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

முன்னதாக சிறை வளாகத்தில் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சிகளில் சிறைக் காவலா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT