மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மரணமடைந்த குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமணை பட்டா செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.
பேரையூா் தாலுகா சூலப்புரம் கிராமத்தை சோ்ந்த செல்லதுரை என்பவா் அகால மரணம் அடைந்ததை தொடா்ந்து அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையினை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கினாா்.
இதில் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் சாந்தி, பேரையூா் காவல் துணை கண்காணிப்பாளா் மதியழகன் ஆகியோா் உடனிருந்தனா்.