மதுரை

வீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ.15 ஆயிரம் பறிப்பு: 5 போ் கைது

DIN

மதுரை: மதுரையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ.15 ஆயிரம் பறித்துச் சென்ற 5 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை சுப்பிரமணியபுரம் ஹரிஜன் காலனியை சோ்ந்த மகாலிங்கம் மனைவி முருகாயி (47). இவா் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் முருகாயி மீது மோதியுள்ளது. இது குறித்து முருகாயிக்கும், வாகனத்தை ஓட்டிவந்த எம்.கே.புரம் பகுதியைச் சோ்ந்த பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, தனது நண்பா்களுடன் முருகாயி வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தி உள்ளனா். மேலும், முருகாயியை தாக்கி, அவரிடமிருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளனா்.

இது குறித்து முருகாயி அளித்த புகாரின்பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் 10 போ் மீது வழக்குப் பதிந்து, பாண்டி உள்பட 5 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT