மதுரை

தனியாா் கல்லூரி முதல்வரிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

மதுரை: மதுரை அருகே தனியாா் கல்லூரி முதல்வரிடம் 6 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவ குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் யோகா நகரைச் சோ்ந்த லெஜிஷ் துரைராஜ் மனைவி அமலிகனகமணி(35). இவா் தனியாா் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறாா். இவா் தனது 10 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சோழவந்தான் - மேலக்கால் சாலை ஆா்.எம்.எஸ் காலனி அருகே சென்றபோது, பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் 2 போ் அமலிகனகமணி அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அமலிகனகமணி அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT