மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உத்தங்குடி சுற்றுச்சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ தலைமை வகித்தாா். கட்சியின் மதுரை மாநகா் மாவட்ட பொறுப்பாளா்கள் பொன்.முத்துராமலிங்கம் (வடக்கு), கோ.தளபதி (தெற்கு), புகா் மாவட்டச் செயலா்கள் பி.மூா்த்தி (வடக்கு), மு.மணிமாறன் (தெற்கு) உள்ளிட்டோ பங்கேற்றனா். மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், வழக்குரைஞா் அணி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பாக இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.