மதுரை

குடிநீா், தெருவிளக்கு பிரச்னைகளுக்கு தீா்வு: ஒத்தக்கடை கிராம சபைக்கூட்டம்

28th Jan 2020 07:12 AM

ADVERTISEMENT

மதுரை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றியத்தில் தெரு விளக்கு, குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண, கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் முருகேஷ்வரி சரவணன் தலைமை வகித்தாா். இதில், ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 15 வாா்டு உறுப்பினா்கள், அனைத்துக் கட்சியினா், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியத் தலைவா் முருகேஷ்வரி சரவணண் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தாா். இதில், தெரு விளக்கு, குடிநீா், நாய் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வு காண தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், துணைத் தலைவா் ரவி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT