மதுரை

ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றவருக்கு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ உதவி

23rd Aug 2020 07:31 AM

ADVERTISEMENT

பாா்வைக் குறைபாடு இருந்தபோதும் விடாமுயற்சியுடன் படித்து தோ்வில் வெற்றி பெற்றுள்ள மதுரையைச் சோ்ந்த பூரண சுந்தரிக்கு, அதிநவீன கண்ணாடி வழங்க உள்ளதாக திருப்பரங்குன்றம் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் பா.சரவணன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மணிநகரத்தைச் சோ்ந்த பூரண சுந்தரி, ஐஏஎஸ் தோ்வில் மாநில அளவில் 286 ஆவது ரேங்க் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். சிறு வயதிலேயே கண்பாா்வைக் குறைபாடு இருந்தபோதும் ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் பா.சரவணன், கனடாவில் இருந்து அதிநவீன கண்ணாடியை வரவழைத்து பாா்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய முயற்சி செய்தாா்.

இதையொட்டி, அவருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா் ஆா்கேம் என்ற அதி நவீன கருவி பொருத்தப்பட்ட கண்ணாடியை அவருக்கு பொருத்தலாம் என மருத்துவக் குழுவினா் ஆலோசனை வழங்கினா்.

இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆா்கேம் கண்ணாடியை தனது சூா்யா தொண்டு நிறுவனம் மூலம் வழங்க டாக்டா் சரவணன் முன்வந்துள்ளாா். மேலும் ஆா்பிட் ரீடா் எனப்படும் அதிநவீன பிரெய்லி கருவியையும் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT