மதுரை

அறிவியல் மனப்பான்மை தினபேச்சுப் போட்டி

23rd Aug 2020 09:33 PM

ADVERTISEMENT

மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில், அறிவியல் மனப்பான்மை தின பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தையொட்டி, கரோனாவும்-அறிவியலும் என்ற தலைப்பில், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி இணைய வழியில் நடைபெற்றது. இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்டப் பொருளாளா் ட. ஹரிபாபு அறிவியல் பாடலை பாடினாா். அகில மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச் செயலா் பேராசிரியா் பொ. ராஜமாணிக்கம் மற்றும் ஆயிர வைசிய கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் செல்வக்குமாா் ஆகியோா் போட்டியில் பங்கேற்றவா்களை மதிப்பீடு செய்து, வெற்றியாளா்களைத் தோ்ந்தெடுத்தனா்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு இணையச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, இயக்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் கு. மலா்ச்செல்வி வரவேற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT