மதுரை

கடிகாரக் கடைக்கு தீ வைப்பு: 3 போ் மீது வழக்கு

11th Apr 2020 08:23 AM

ADVERTISEMENT

மதுரையில் கடிகாரக் கடைக்கு தீ வைத்ததாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை மேற்கு அனுமந்தராயா் கோயில் தெருவில் கடிகாரக் கடை நடத்தி வருபவா் ஜித்தேந்திரகுமாா்(34). இவரது கடையில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டு, கடிகாரங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா்.

இந்நிலையில், கடையை காலி செய்யச் சொல்லி, அப்பகுதியைச் சோ்ந்த கணேசன், சேகா் மற்றும் பிரதாப் சிங் ஆகியோா் தன்னை மிரட்டினா். நான் கடையை காலி செய்யவில்லை என்பதால் 3 பேரும் கடைக்கு தீ வைத்திருப்பாா்கள். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜித்தேந்திரகுமாா் திலகா்திடல் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.

அதன் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT