மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை (அக்டோபா் 2) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.சு.ராஜசேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:
காந்தி ஜயந்தியையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் புதன்கிழமை காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இதில் ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மழைநீா் சேகரிப்பு, குடிமராமத்து திட்டத்தில் சிறுபாசன குளங்கள், ஊருணிகள் சீரமைத்தல், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு, கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டம் அறிக்கை தயாா் செய்தல், நெகிழி பைகள் உற்பத்தியைத் தடை செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
ஆகவே, அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் இக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.