மேலவளவு ஊராட்சித் தலைவா் உள்பட 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 57 போ் கைது செய்யப்பட்டனா்.
மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கடந்த 1997-இல் கொலை செய்யப்பட்டனா். தமிழகத்தை உலுக்கிய இந்த 7 போ் கொலை வழக்குத் தொடா்பாக கொலையாளிகள் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் கொலையாளிகள் 13 பேரையும் தமிழக அரசு பொது மன்னிப்பின் கீழ் கடந்த வாரம் விடுதலை செய்தது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கோரிப்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இப் போராட்டத்துக்கு மாநிலத் தலைவா் த.செல்லக்கண்னு தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலா் எம்.பாலசுப்பிரமணியம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் இரா.விஜயராஜன், புகா் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா். அப்போது மறியல் நடத்த போலீஸாா் அனுமதி மறுத்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், போலீஸாா் அமைத்திருந்த தடுப்பை மீறி போராட்டக்காரா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா். இதனால் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கூடுல் போலீஸாா் வரவழைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 57 பேரை கைது செய்தனா்.